Friday, August 17, 2012

தோழிக்காக....




பேசிக்கொண்டே
இருந்தோம்..
சரி சாப்பிட்டுவிட்டு வா!
நேரமாயிற்று..
நானும் சாப்பிடப்போகிறேன்.

இன்று விரதம் வேறு
என்றாள் தோழி..

அப்படியா?
இன்றென்ன விரதம்
வினவினேன் நான்...!

தெரியாதா?
இன்று அமாவாசை
என்றாள்..!!

அப்படியென்றால் நிலா
வராதா ?

வெகுளியாய்
நான் கேட்க..!!

முறைத்துக்கொண்டே
அதான் நான் வந்துவிட்டேன்ல
போய் ஒழுங்கா சாப்பிட்றா!
என தலையில்
குட்டினால்...!

எங்கோ பௌர்ணமி
பிறை விட்டிருக்கும்..!

-கவிதைக்காரன்!

No comments: