Monday, August 20, 2012

ஒரு புன்னகை... சில கோபங்கள்...





அக்கா மகனின்
காதுகுத்து விழாவாம்..


பழைய
கோபங்களால்
மனவருத்தங்களாலும்

இரண்டு வருடங்கள்
பேசாமலே இருந்தவள்
இப்போது  அழைக்கிறாள்.

வரமாட்டேன்.
என உரக்கச்சொல்லிவிட்டு

அழைப்பை துண்டித்துவிட்டு
கிக்கரை உதைத்து
கிளம்பினேன்..!
வேலைக்கு..



சாலையோர பேரூந்தின்
ஜன்னலோர
சிறுவனின்
சின்னப்புன்னகைகளில்
சிதறிவிடுகிறது...
என் அத்தனை கோபங்களும்..

-கவிதைக்காரன் ! 

No comments: