Sunday, August 26, 2012

நினைவின் எச்சமாய்...


அந்த ரயில் நிலையத்தில்
இன்று நான் காத்திருக்கிறேன்...
வழக்கம் போல கிறுக்கும் போனாவை கைக்கு
கொடுத்தபடி..

முளைத்திருந்த சில காளான்கள்
நேற்றைய மழையை
மறக்கடிக்கவே இல்லை..

அந்த ரயில் நிலையத்தில்..
தேம்பி இருந்த மழைநீரில்

வானம் விழுந்துகிடப்பதை
அறியாமல்தாண்டிப்போன

ஒரு தலைப்பாகை கட்டிய
பெரியவரும் என் பார்வையில்
கவிதையாகிருக்க..

வராத ஒரு ரயிலுக்காய் நான்
காத்திருக்கிறேன்’ என நீங்கள்
அறிந்திட வாய்ப்பில்லை...

ஆம்! பாழடைந்த வீட்டுக்குள் பட்டாம்பூச்சி
சிறகசைத்தால் வரும் சந்தோசம் போல்
எனக்கு இங்கே... ஒரு ஈர்ப்பு..

மழை பெய்த மறுநாளில்
இங்குவந்து சுவர்களில்
படிந்த பாசி மணமும் ஈரம் செறிந்த
தண்டவாளங்களுக்கும்...

என் வரவு ஒன்றும் புதிதானதும் அல்ல
ஏறக்குறைய ஐந்துவருடவழக்கம்
முன்பு இந்த மார்க்கத்தில் ரயில்கள் வந்து
கொண்டுதான் இருந்தது...

மீட்டர்கேஜ்கள் மாற்றமடைந்து
பிராட்கேஜ்களாக மாறிய நாட்களில்
அடையாளம் மறுக்கப்பட்ட
அகதியின் குடிசையாய்..ஆனது...

நினைவுகலைத்தாங்கி
எச்சமாய் நின்ற இந்தமஞ்சள்
கட்டிடத்தோடான பிணைப்பிற்கும்
ஒரு மழைக்கு மறுநாள்தான்

காரணமாய் இருந்ததென்பது..
மறுக்கமுடியாது..அதை படிக்க
என் ஐந்து வருடம் முந்தைய
பழைய டைரியை புரட்டவேண்டும்...

ஜன்னல் கம்பிகளில்....! தரையில்
சொட்ட வரிசைகட்டி நிற்கும்
நீர்த்துளிபோல ஒரு அழகான ஒருதலைக்காதலுக்கு
இறையாகிப்போன நண்பனின்
உயிர்....!

இந்த தண்டவாளத்திற்கும்
இரயில் நிலையத்திற்கும் வெறுக்கத்தக்க
அடையாளத்தைகொடுக்க
அஞ்சாங்கிளாஸ் சிறுவனுக்கு இது

பேய் இருக்கும் வீடானது...
எனக்குமட்டும் நினைவிருக்கிறது..
அந்த மழைக்காளான்கள் போல
நண்பனின் நினைவுகள்...

அவ்வப்போது வந்து இப்படித்தான்
எதையாவது கிறுக்கிப்போகிறேன்
எனக்கும் கூட ஆவி பிடிப்பவன்- என
பெயர்வைத்திருக்கிறார்களாம்...

அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை
அடுத்து என்று மழைவருமெனத்தெரியும் வரை
இந்த டைரிக்கும் எனக்கும் இங்கு வேலை இல்லை...
நினைவில் நட்பு...


-கார்த்திக் ராஜா...

No comments: