Sunday, November 20, 2011

நினைவுகள் தாங்கிய நதிக்கரையில்....







நம் சந்திப்பு பொழுதுகளின்
இறுதியில்..
விடைபெற்று நீ சென்றதும்

அடுத்த ஐந்தாறு நிமிடத்தில் 
அழைத்து எங்கே இருக்கிறாய் 
என்கிறாய் ..!

*உன் மனதில் தான் என 
சொல்ல வார்த்தை முட்டும் 
எனக்கு..
அந்த நிமிடம்....!

^^^^^^^^^^
அன்றொரு கடற்கரை 
சந்திப்பில் 
உன்னை அருகில் 
வைத்துகொண்டே 
அலைகள் ரசித்திருந்தவனிடம் 
சரி வா கிளம்பலாமென்றதும் 

அத்தனை ரசனையையும் 
உதறிவிட்டு இன்னும் 
கொஞ்ச நேரம்
எனக் கெஞ்சி நிற்கிறேன் 
உன்னிடம்
அந்த நிமிடம்..!
^^^^^^^^^^

ஒரு மதிய பொழுதினில்.
"பசிக்குது சாப்பிடலாமா ?"
என்று கேட்டால்
"எனக்குப் பசிக்க வில்லை 
என்கிறேன்.
ஏன் ? எனக்காரணம் கேட்டாய்

பார்வையாலே உனை 
மென்று கொண்டிருக்கிறேன் 
இனி எப்படி பசிக்கும் 
என்றதும்,  செல்லமாய் அடிக்க கை 
ஓங்கினாய் அந்த நிமிடம்.

^^^^^^^^^^^

இப்படி தெளிந்த என் வானத்தில் 
என் காதல் பூப்பூத்தது 
மழை நீரில்லாமலே ..!
இன்று நதிக்கரையோரம் 
வட்டக்கல் வீசி 
தனித்து நிற்கிறேன் 
நீயில்லாமலே..! 

அந்த நிமிட நினைவுகள் எல்லாம் 
இன்று என் சில பல 
மணி நேரங்களை 
ஆக்கிரமித்துக்கொள்கிறது 
முழுவதுமாய் ..!

கல் விழுந்த இடம் சுற்றி 
அலை அலையாய் உன் நினைவுகள்..

எழுத்துப்பிழைக்காரன்... 
-கார்த்திக் ராஜா.. 


2 comments:

ஜீவா said...

:)

Unknown said...

ம்ம்ம் நீங்காத நினைவுகளா..?