Saturday, October 29, 2011

காதல் சொல்ல வந்தேன் 2






போய்வரும் திசை பார்த்து
சட்டைப்பையில் மடலோடும்..
கரங்களில் மலரோடும்..
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்..

கண்களில் சிறு பரிதவிப்போடும்
காதலில் சிறு விதர்ப்பத்தோடும்.
வேடிக்கை பார்ப்போரின்..
பார்வைக்கு சிருதீனியாகவும்..

நேற்றுவரை பெய்யாத மழைக்கு..
ஒரு ஏக்கத்தோடும்..
கண்சிமிட்டலையே மறக்க
தூக்கம் துறந்த..இரவோடும்...
தேடிபிடித்து விரும்பியத்தை உண்டிருந்து..
தற்போது..பசித்தல் மறுத்து..

கவிதை எழுத பழகிய கைகளோடும்.. 
கண்ணீரில்லா கண்களோடும்
யார் காதல் வென்றாலும்
விழா எடுத்து கொண்டாடும்
மனோபாவத்தோடும் 

ஏதாவது ஒரு காதல்..
நீ இருக்கும் அந்த வீதியில்...
நிச்சயமாய்
குடியிருக்கும் நெடுநாளாய்..
--கார்த்திக் ராஜா..
 

No comments: