Saturday, October 29, 2011

காத்திருப்புகளில்.....




வரவேண்டிய
ரயிலுக்காய் காத்திருந்த..
நிமிடங்கள்..
ஜன்னலோர பேருந்தின்
சாளரம்..
ஈரக்காற்றை வீசி
செல்லும்
வயவெளி..கிராமம்..
அந்த ரெட்டைவால்குருவி
அமர்ந்திருக்கும்..
வேகத்தடை பலகையின்
கிழே..நேற்றைய மழையின் மிச்சமாய்
ஒரு காளான்.. 
காத்திருக்கும் சில நிமிடங்களில்
எத்தனையோ இருக்கு
கவிதை எழுத...
என்னைசுற்றி...இயற்கை எனக்குள்
இன்னும் விரிகிறது
எழுத்துக்களால்.. 
-கார்த்திக் ராஜா.

No comments: