Saturday, October 29, 2011

நீண்ட இரவு...!




என் தனிமையின் நீண்ட
இரவுகளில் சுகம் பெற
முயலும் போது உன்னைப்
பற்றிய நினைவுகளில் நீந்தும்
போது மட்டுமே உச்சகட்டம்
அடைகிறேன்..திளைப்பில்..!!!

ராத்திரியின் படுக்கையில்
பயணப்படுகையில் நிலா
போன்ற உன் முகமே என்
நீண்ட இரவைப் பயணிக்கிறது
முகில்களுக்கிடையே..!!!

சரியாய் நித்திரை கொள்ள
முயலுகையில் என் நீண்ட
இரவின் நீளம் குறையும்
விடியல் காலையில் இரவு
தூக்கத்தின் ஆழம் அழகாகிறது..!!!

தேனுக்குக் கிளம்பும் வண்டாய்
மீண்டும் முழு முயற்சியுடன்.....
அழகிய காலையில்
உனக்காய்.....
எனக்காகிய
காதல் தேன் பருக
மீண்டும் பயணப்படுகிறேன்..!!!

கையில் மிச்சமிருப்பது
நேற்று கனவில் வந்த
உன் பிம்பம் மட்டும்
காதலாகி..!
-கார்த்திக் ராஜா
 

No comments: