Saturday, October 29, 2011

ஓர் இரவுக்கு முந்தைய பொழுது....


தெருமுனைவரைசென்ற தடமொன்று

திரும்பிவிடும் தூரத்தில்தான்..

இருக்கிறது..வீடு..

அங்காடித்தெருக்களின் ஆரவாரங்களில்

வண்ணகுமிழ் விளக்கின்

வெளிச்சங்களில்சற்றே மங்கும்

ஊரெல்லை தொட்டதும்..

பெருமூச்சொன்றுபெருகி ஓடும் என்னுள்

தனியே வீடு நோக்கி நகரும்..

நிலவொழுகும் ராத்திரியில்

ஓரிலையும் அசையாத மரத்தினடியில்

இளைப்பாறும் சாலை..மருங்குகளில்

நத்தைபோலும் பயணிக்கும்

நிலவான இரவும் நானுமாய்...

தொடுவானம் தாண்டியும்

நீண்டிருக்கும்...ஒற்றின் விளக்கொளி..

ஒரு மாலை நேர பயணம்..



-கார்த்திக் ராஜா..
 

1 comment:

Anonymous said...

இந்த கவிதை நீங்கள் எழுதியதா?