Saturday, October 29, 2011

காதலென...!


கண்களில் எழுதுகிறாய்
காதல் பொய் சொல்லுகிறாய்
வருகைக்காய் காத்திருப்பதாய்

காதில் பூ சூட்டுகிறாய்
ஏமாற ஆள் நானில்லை
பரிமாற்ற என்னிடமும் காதல்

மீதமில்லை அது ஒரு
விழியாளுக்கு சொந்தமாகி
அதோ ஒரு வீதியில்
வேடிக்கை பார்க்கிறார்களே
அங்கே அடிபட்டு சாககிடக்கிறது..!!

அதற்க்கு உயிர் கொடுக்க
இனி என்னிடத்தில் உதிரமில்லை..!

அவள் வீசி சென்ற புன்னகை
குத்தீட்டியாய் கோர்த்து
சென்ற பார்வைகள்-எல்லாம்
அந்த குப்பை தொட்டியில்
கிடக்கிறது பொருக்கி கொள்.

இனி என்னிடம் கவிதைகளுக்கு
மட்டும் தான் வேலை இருக்கிறது
பொய் முகவரியில் தொடங்கும்
எந்த காதலுக்கும் இடம் கொடுப்பதில்லை
நான்..

மின்னஞ்சல் பரிமாறலும் இல்லை
அரட்டையில் கேளிக்கையும் இல்லை
நான் நானாகவே இருக்க..

எனக்குபோதும் கவிதை ஒன்று!..



........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 

No comments: