
திக்கற்ற வெளியில்
திசையறியாது
தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்
உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை
கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்
என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு
இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது
செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
No comments:
Post a Comment