Saturday, October 29, 2011

கண்ணீர் வரைந்த கவிதை


நித்திரை இழந்த இரவின்
நடு நிசிவேளை
என் அறைக்கதவு திறந்து
முற்றத்திற்கு வரம் என்
மேனி மீதினில்
மென்மையும் வேகமுமாய்
மோதிப் பிரியும் வாடைகாற்றாக
உன் நினைவு..



வாடைகாற்றின்
தீராதா ஏக்கத்தில்
தீந்தொளிந்தாலும்..!
அதே இடம்விட்டு நகராமல்
நெடு நேரம் நின்றுவிடுகிற
என்னை..காணதவாறே..!
கடந்து போய்விடுகிறாய் காற்றே..

இன்று..
உன் கனவில்கூட
நான்
காணாமல் ஆக்கப்பட்டிருப்பேன்.
என்றாலும்
நீ என்னை மறந்துவிட்டாய்
என்பதையே...!
நீ என்னை நினைத்திருந்தாய்
என்பதற்கான சாட்சியமாய்
வைத்துகொள்வேன்!...

இந்த சாட்சிகளில் ..முன்
நான் ஆயுள் கைதியாய்
கண்ணீரோடு...!
-கார்த்திக் ராஜா..
 

No comments: