Saturday, October 29, 2011

கல்லறைச்சிறை...!


இரவு பொழுதின்
தூரல் நிலவோடு என்
சாரல் நினைவுகளை
பகிர்ந்து கொள்கிறேன்

தூரல் நின்ற பின்பும்..
தூரம் நின்றபடி
ஈர நினைவுகளை
என் தூர நிழலோடு...

கனவு மாளிகையின்
வாயிற்கோபுரம் போல்
திறந்தேகிடக்கிறது உன் நினைவுகள்.
நிலவு அசைகையில் மட்டும்
அந்த தனிமை விழுதுகள்
வேர்களாய் மாறி
என் நினைவை துளைத்தன

நிலாக்கோலம் பூண்டவள் என்று
சொல்லிசொல்லியே...(எழுதி எழுதியே..)
தனிமையில் என்னை சுழலவிட்டு சென்றால்
அவள் நினைவுகளில்..

எப்போதும் உன்மீது வீசும் மகிழம்பூ..
வாசம்...எங்கே என..தேடிதுவளும் -என்
நாசிகள் அறியாது போனது..
இதயத்தில் நீ கிழித்து போட்டு போன
காயத்தின் வடுக்களை ....

இதோ..! தூரத்தில் தெரியும்
நிலவின் ஒளியை ரசித்து நிற்கும்
அந்த நிழல் உருவத்தின் முகம்தெரியா
இருட்டுபிரதேசத்தில்
துளிர்த்திருக்கும் கண்ணீரே ..!
என் மறித்து போன காதலுக்கான உயிருள்ள சாட்சி..

No comments: