Saturday, October 29, 2011

விருப்ப வெறுப்பிற்கு அப்பால்...


இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையகம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்குகிறது...

அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்து போனது...

நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது...

தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது...

ஆனால் இவை எதையும்


என்னால் வெறுக்க முடிவதில்லை...


என் மேல்..
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழிந்த....காதலையும்
கைவிடுத்து போன உன்னையும்......
---கார்த்திக் ராஜா ....
 

No comments: