Saturday, October 29, 2011

எத்தனை எத்தனை பொய்களடா!


நானும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருந்தேன் ...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருந்தேன் ....

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருந்தேன் ...

எங்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாய்
அலட்டிக்கொண்டிருந்தேன் ....



இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா....இத்தனை பொய்யையும்..
நானா எழுதினேன் ...!
-கார்த்திக் ராஜா.....
 

No comments: