Saturday, October 29, 2011

காதல் சொல்ல வந்தேன்

ஒரு பகல் ...
ஒரு மாலை..
ஒரு இரவு...
முகம் காட்ட மறுத்துவிட்டாய் !

மனதிற்குள் கலவரம்
நீ என்னைவெறுக்கின்றாயா?
நீ என்னைவிரும்புகிறாயா?

கேள்விகள் மனதை
தூக்கணாங் குருவி கூடு போல
காற்றில் அலைபாயச்செய்ய ..!!

அன்றுஇரவு முழுவதும்
விடியலுக்காகவே விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக விடிந்தது...!

மீண்டும் உன்முன் உதயமானேன்,
நீ என்னை உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

சரிதான் என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை தோற்றுப் போனது !!?

உன்னிடமே கேட்டு விட
தீர்மானம் நிறைவேற்றிவிட்டேன்.

அன்றுஉனக்கு முன்னால்
நீ போகும் பாதையை
நான் ஆக்கிரமித்துக் கொண்டேன்.

அதோ வருகிறாய் உன் பெயரை
உச்சரித்தவுடன்

திசை மாறி திரும்பிப் பார்த்தாய்.
அப்போதும் நீ பேசவில்லை

உன் உதடுகள் தான் ஒரு
புன்னகை புரிந்துவிட்டு போனது.

அதில் என்னையே மறந்துப் போனேன்

என் காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?
எனக்கு ..! 

--கார்த்திக் ராஜா..!

No comments: