Saturday, October 29, 2011

அதே நாள் அதே இடம்...



வேனில் சிந்திபோகும்

வெயில் மாலை ..

அஸ்தமனம் எதிர்பார்த்து
ஆலயகோபுரத்துக்குள்

அடைதேடும் பறவை குளாம்.
நெடுநாளைய கனவின்

நிழல் கொஞ்சமாய் படந்த
ஓர் ரம்மியமான சூழல்

எல்லோரும் தூரத்து
சொந்தக்காரன் போல் தோன்றும்

பேரூந்து நிறுத்தம்.
தமிழ்நாடு அரசு வாகனம்

எனும் பெயர் தாங்கிய
4x4 வாகனம் நிலைதடுமாறி

நிறுத்ததிற்குள்..நுழைய..
அந்தோ பரிதாபமாய்

பறிபோனது 8 உயிர்கள்..!
ஆனது இன்றோடு ஒருவருடம்

மீண்டும் அதே நிறுத்தத்தில் நிற்கிறேன்
கண்முன்னே காணாமல் போன

அந்த தூரத்து சொந்தங்கள்
நிழல் உருவங்களாய்

சாலை மருங்கில் மஞ்சள் கோடுகள்
தான் அவர்களின் அடையாளம்

என்றாகிப்போனது.

அஸ்தமனம்
ஆகாமல் பறவை தேடிசெல்லும் ஆலயம்
ஒலிக்கிறது.. ஏதோ. ஒரு இறைவனின் பாடலை

No comments: