Saturday, October 29, 2011

நீ மாறவே இல்லை..!!!



முகில் பூக்கும் வனம்!!!
நதி பாயும் இசை...!!!
தொட்டு செல்லும்
இடைவெளியில் மேகம்..!!!
காதின் அருகே கிசுகிசுக்கும்
தென்றல்..!!!
தென் துளிர்க்கும்
மந்தாரப்பூக்கள்
பட்டாம்பூசிகளின் அசைவுகளை
பத்திரமாய் கவனித்து ..!!!
தெள்ளென தெளிந்திடாத வானம்
அதில் சிதறிய மூக்குத்திப்பூக்களாய்
விண்மீன்களின் வெட்க்கசிந்தல்கள்
அருவி தெளித்த தூறல் போல்
புல்லெங்கும் சீராய் படிந்த பனி
எந்தபூவிலும் கிட்டாத
இயற்கைவாசம்...!!!
கையேடு கொண்டு வராமல் நானிருக்க
கவிதை ஒன்றை கண்ணில் எழுதி
வைத்து காத்திருக்கிறேன்.
நடைபாதையில் தோறும் ஆங்காங்கே
பூக்கள் ..! என்றோ நாம் நடந்திருந்த
கால்தடத்தை பத்திரப்படுத்தி..!!!
வரட்டும் தாமதமாயே..உன் வரவு
நிமிடங்களை பிரித்தெடுத்து
நான் கவிதையாக்கி
கொண்டிருக்கிறேன்..உனக்காய் அல்ல
நம் நினைவுகளுக்காய்..முன்பு
நீ சிந்திப்போன புன்னகையை
சுமந்திருந்தேன் அன்றிலிருந்து
நட்பால்
என் கரங்களில்...!!!

நீண்டதொடு இடைவேளிபின்
நாம் சந்திக்கும் இத்தருணம்
ஏதோ பத்து வரிக்கவிதைக்குள்
அடங்கிவிடுமா என்ன..
மேகம் இன்னும் பக்கமாய்
என்னை நெருங்க..
அதோ தூரமாய் உன் நிழல்...!!!
என் மௌனகவிதைகளுக்கு
இப்போது முற்றுபுள்ளி
வைக்கலாமென இருக்க...

வந்ததும் வராததுமாய்
தொடர்புள்ளி வைத்து
இத்தனை நேரத்தில் நீ
சேமித்து வைத்த எனக்கான
-கவிதையை
உன் கண்கள் காண்பித்ததை சொன்னாய்...!!!

*நீ மாறவே இல்லை...கூடவே நானும்..!*


-கார்த்திக் ராஜா..
 

No comments: