Saturday, October 29, 2011

கனவொன்று வேண்டும்...


வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து
அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின்
வாசத்தோடும்,
வரலாறாய் மட்டும்
மிகாமலும்,
முன்னேற்றப்
படிக்கட்டுகள்
நிறைந்த
பல்லடுக்கு
மாடிகளின்
முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை
நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின்
அசைவில் -
சுகந்தக் காற்று
வீசும் - தென்றல்
பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும்
வாழ
யாரையும் நோகாமல் ஒரு -
கனவேனும் வேண்டும்!!!
நித்தம் ஏங்கும்
என் இரவுகளுக்காக
மட்டுமாவது
வந்து போகட்டும்
அந்த யாரையும்
நோகாத கனவு..!
-கார்த்திக் ராஜா.!
 

No comments: