Saturday, October 29, 2011

நிலவோடு...!


பௌர்ணமி ஒரு புள்ளியாய்..

வான்முகில் வெள்ளை போர்வையாய்
விண்மீன்கள் வெட்கம் சிந்தும்
வான்தோட்ட மலர்களாய்!
நானிருக்கும் தனிமை
எழுப்புருக்கும் குளிரில்.
வாடை காற்று மோதி செல்ல..
வசந்த காலத்துக்கு இடம்
பெயர்ந்து வந்த பறவையின்
குரலாய் எங்கோ ஒரு கீதம்..
தனிமை என்னை இன்னும்
நெருங்குகிறது.. கைகள் கோர்த்து நடை
கொள்கிறேன் அதனோடு நானும்..!
எல்லாவற்றையும்..
குறிப்பில் எழுதி கொள்கிறேன்.
பௌர்ணமியையும் படம் பிடித்து
கொள்கிறேன் -உன்னோடு இதே நிலவில்
பகிர்வதற்காய் ...
-(சற்றுமுன் ) கார்த்திக் ராஜா..!

நிழற்படத்துக்கு சொந்தக்காரர் : அண்ணன் குமார் ரங்கராஜன்

No comments: