Saturday, October 29, 2011

இலைதிர்க்கும் காலம்...






ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.
வயதாகி விட்ட தென்கிறாய்

உலர்ந்த அம் மரத்தை
நோக்கியபடி.
நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற

வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.
மண்ணின் மகத்துவம் அறியாது..
மதிகேட்டுபோன..

மானிடனே..!
மாங்கனிப்பழமும்
மாசற்ற காற்றும்..
உன் மகன் பிள்ளைக்கு
போய்தான் சேர்ப்பாயோ !

மரம் ஒன்றை வீழ்த்தினால்
மனிதம் பத்து வீழ்வதை
மனத்திரையில் எங்கனமும்
நினைத்தாயா !

பச்சைபோர்வையாய்..
பசுமை வீசுகின்ற..
மலையரசி (உதகை)
சரிந்ததை மறந்தாயோ..

இனி பொம்மை மரங்களை..மட்டும்
காண்பாயோ...
அருங்காட்சியகத்தில் மட்டும்...!
கார்த்திக் ராஜா ..!
 

No comments: