Friday, March 18, 2011

என்றோ விடியும் என்றே  என்றும்
துவங்கும் எம் மக்களின் நாட்கள்...
கைதூக்கி நிறுத்துபவன் தான் கேட்டான்..!
எண்களின் கழுத்தை நேரிப்பவனாய்
மாறிப்போன கூட்டம் ஏன் ?
நாடாளுமன்றம் எம் மக்களை
நாத்தியற்றவனாக்கும் பேர் கையில்
போய் சேருதல் ஆகுமோ..!
விலைவாசி ஏறினால் கூட உழைத்து
பிழைதிருந்தோம்...
 இன்றோ !
கொலைவாசியான கூட்டம் நாடாள்வதால்
கண்ணீரில் வலை விரித்து மீனுக்காய்
காத்திருக்கிறது எம் மக்கள் கூட்டம்...

தமிழன் வீழ்ந்தால் இத்தாலி மூளிக்கு..
இளிப்பை தவிர ஏது வாய்க்கும்...
அது சரி...கட்டுமரமாவேன் என்பானே...
கரையான் புற்றாய் வீற்றிருக்க..
என் மக்கள்  கழுமரம் ஏறுதலை  தடுப்பவனும் யாரங்கே...?  

ஆட்காட்டி விரலை கொண்ண்டு நம் தலை எழுத்தை 
மாற்றமுடியும்...அதர்மம் தலை தூக்கும் பாரில் 
இனி நம் அழுதல்கள் தீரட்டும்  
ஓட்டுச்சாவடியில்
நம் ''அலுத்தல்கள்'' மாறட்டும் 
"ஆதவனை"  "கை" மறைத்தாலும் "கை"-யினை
ஆதவன் சுட்டாலும்...கண்கட்டி விதைக்கு கலங்கிடாது... 
இலவச எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டாது.. 

கண்ணை திறந்து கரம் கோர்ப்போம் 
நம் தாழ்ந்திருந்த சிரம்...நேர் பாப்போம்...
                  ---கார்த்திக் ராஜா..

No comments: