Friday, March 25, 2011

ஜன்னல் சமாதி...

என் ஜன்னல் வெளியே
பார்க்கும்போது மட்டும்..
சதுரமும் இல்லாமல்
செவ்வகமும் இல்லாத -ஓர்
வானம் ...
கருப்பின் நிழலாய்...
என் மீது வெறுப்பை உமிழும்
வண்ணமாய் தெரியும்..
தூரத்தில் என் வலது புறம்
நடந்து கொண்டு நீ
அருகே உன் இடது புறம்
உடைந்து கொண்டே நான்...
தடுமாறி கொண்டிருக்கும் என் விழிகள்
உடந்துருகும் பனி போல கரைந்திட..
என்  மௌனத்தோடு  மூச்சையும் 
நிறுத்தி போகும் மழையானவள் நீ... 
எனக்கான என் உயிரை
எடுத்து செல்லும் முன்
இந்த ஜன்னலுக்குல்லேயே என்னை
சமாதிசெய்துவிடு...
சிறகில்லா...கவிஞன்... .
----------கார்த்திக் ராஜா

No comments: