Monday, March 14, 2011

மனிதநேயத்தை கொன்று விட்டு...

காற்றிலே
ரத்தத்தின் வாசம்
வீசுகிறது

தொலைவில்
யாரோ
கொலையுண்டிருக்கிறார்கள்

இப்பொழுது
மெலிதாய்
கொலையுண்டவனின்
குரலும் கேட்க்கிறது

கேட்பாரற்றுக்
கரைகிறது
அவன் குரல்

நானும்
கேட்கவில்லை

உதவிக்காய்
நீண்ட
அவன் குரலை
காற்றிலே அறுத்து
தலை குனிந்து
நிற்கிறேன்

அவனின்
கடைசி மூச்சின்
ஒலி குறைந்ததும்
ரத்தம் படிந்த
என் கைகளை 


காற்றிலே கழுவிக்கொள்கிறேன்.......!!!! 

ஆம் மனிதநேயத்தை கொன்று விட்டு நானும் கொலைகாரனாய்...

---kaarthick raja

No comments: