Monday, March 28, 2011

வர்ணம் இழந்த வரைபடமாய்
வாழ்க்கை...
எச்சிலை உண்டு ஏப்பமிடும்
எக்காளம்....

வருங்கால அடிமைகுரலா!...
தாய் மொழி தமிழென்பதை
மறந்து

தலைபோன தலை விதிகொண்ட
மழலைகளின் மறுதலிப்பு...
மங்கலாகும் மொழியறிவு

இலக்கணம் என்றால்என்ன ?
கேள்விகளில் வந்ததுண்டு பள்ளியில்...
இந்த கேள்வியாவது மிஞ்சுமா
வரும்  விடிவெள்ளியில்   

தத்தெடுத்த மொழியே
தமிழ் மொழியாய் 
தரணியெங்கும் எம் புதிய தலைமுறை...

பெற்றவளை மறந்து
மற்றவளின் மடியில்
மமதை காணும் மாமனிதராய்
என் தமிழ் மக்கள்...

இனி பாரதிக்கு இங்கே எதற்கு சிலை...?
முண்டாசுக்குள் அவன் கண்ணையும்
மறைத்திருந்தால் தேவலாமோ !

No comments: