Wednesday, March 2, 2011

சீமானுக்கு மிரட்டல்

கட்சியைக் கலைத்து விட வேண்டும் சீமானுக்கு மிரட்டல்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு புதுச்சேரியிலிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று காவல்துறை ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியிலிருந்து சீமானுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் உடனடியாக கட்சியைக் கலைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களது கட்சிப் பிரமுகர் முத்துக்குமார் கொலையில் தொடர்புடையவர்கள்தான் இதை எழுதியிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். எனவே சீமானுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்துள்ளோம் என்றனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகவும், காங்கிரஸை கடுமையாக எதிர்த்தும் பிரசாரம் செய்யப் போவதாக சீமான் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

1 comment:

## >>><<< K A R >>><<< ## said...
This comment has been removed by the author.