Thursday, March 3, 2011

சிறகடித்த இமைப்பறவை
சிறைப் பிடித்த சந்தோசம்
உறவெடுத்த விழிப்பாவை
ஊடுருவல் உற்சாகம்
ஊற்றெடுக்கும் நீர்க் கோர்வை
உள்ளுணர்வின் ஊர்கோலம்
மாற்றம் பெறும் சுவாசத்தின்
மனம் போடும் கைத்தாளம்
கட்டுப்படும் இதழ் முகப்பில்
வெட்டுப்படும் உணர்வாகும்
சிட்டு அவள் தலைக்கவிழ்ப்பு
மானத்தின் தற்காப்பு
விட்டு விட்டு சிதறிவரும்
வார்த்தைகளின் சுவை கோர்ப்பு
சொட்டு சொட்டாய் சுகம் பரப்பும்
வதனத்தின் நிறமாற்றம்
கட்டு கட்டாய் அள்ளிவரும்
காதலின் கலையாகும்...

பகிர்வு தோழர் குமரன் முத்து 

No comments: