Thursday, March 3, 2011

இருவிழி கனவு
இமைகளைத் திறந்து
இதயத்தில் நுழைந்தது
தோழி...
என் இதயத்தில் நுழைந்தது
தோழி...

மறுமொழி இல்லை
மௌனமோ எல்லை
புது வித அனுபவம்
தோழி...
இது புது வித அனுபவம்
தோழி...

வரும் வழி தெரியும்
புகும் வழி தெரியும்
வெளிவர தெரியலை
தோழி...

என்னால் வெளிவர தெரியலை
தோழி...

அனுபவமில்லை
அனுகவும் இல்லை
அது வந்தது எப்படி
தோழி...

என்னுள் அது வந்தது எப்படி
தோழி...

இது ஒரு தவிப்பு
இதயத்தின் துடிப்பு
ரசிக்கவே செய்தேன்
தோழி...

நாளும் ரசிக்கவே செய்தேன்
தோழி..

பகிர்வு ...-தோழர் குமரன் முத்து..

No comments: