Monday, March 14, 2011



உன் வீட்டை கடக்கும் போது
எனக்காய் நீ பூத்த புன்னகை....

தெருக்கோவிலை கடக்கும் போது
உனக்காய் நான் காத்திருந்த நேரங்கள்....

உன் தெருவை கடக்கும் போது
பண்டிகைகாய் நீ வரைந்த கோலங்கள்...

தேநீர் கடையில் அமரும் போது
கல்லூரி பேருந்திற்கு நீ காத்திருந்த நிமிடங்கள்...

கல்லூரி பேருந்தை பார்க்கும் போது
எனக்காக நீ அமர்ந்த ஜன்னல் ஓர இருக்கை...

இன்றுவரை அசை போட்ட படியே 
நகர்கிறேன் பதின்மவயது நினைவுகளை...


என்னோடு என் கிராமத்து வீட்டின் பாதையும்..

No comments: