Thursday, March 3, 2011

விழியோடு தினம் பேசி
வளம் காணுது
இளைப்பாற மனம் இங்கு
இடம் தேடுது
வலை வீசி அலை போல
விழி ஓடுது
மலை போல எழும் ஆசை
தினம் மோதுது
விலையில்லா வாணிபத்தில்
மனம் மாறுது
சலிப்பிலா சாதகத்தில்
சதிராடுது
வியப்பிலா வாலிபத்தை
நிதம் காணுது
கலையாத அழகாக
கவி பேசுது
களைப்பில்லா உணர்வினிலே
உடல் வாழுது
காதலின் காவியத்தை
உளம் தீட்டுது...
பகிர்வு தோழர் குமரன் முத்து 

No comments: