Friday, March 4, 2011

ஆசிரியர்-
ஒரு வித்தியாசமான விவசாயி!
பிறர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து
வாய்சொல்லை வரப்பிட்டு
தரிசென கிடக்கும் மாணவர்கள் மனதில்
விருட்ச விதைகள் நட்டு
அறிவுநீர் பாய்ச்சி
சில நேரம்
தன் கைத்தடியால் களை எடுத்து
கண் அசைவால் காத்து நின்று
அறுவடை மட்டும்
தமக்கே இல்லையென்றபோதும்
மகிழ்ந்திருப்பவர்......!

No comments: