Friday, March 11, 2011

என் நேசத்துக்குரிய உனக்கு உன் மீதான 
பழைய காதலில் எழுதுகிறேன் ஒரு கடிதம்...-அன்று  
உன் முகவரியை எழுதும் இடம்  
கூட கவிதை தான் எனக்கு...

இன்று ஏதோ எண்களுக்கு முன்னால் 
உன் பெயரை இட்டு அதற்கு 
மின்னஞ்சல் முகவரி என்றும் 
பெயரும் சொன்னாய்...
எழுதிய எத்துனையோ கடிதங்களை...
அனுப்பாமல் வரைவுகளில்  இருந்தும் 
எழுதாத எத்துனை கடிதம் 
என் பேனாவுக்குள் தவம் கிடக்கிறது தெரியுமா...

வரைவுகளை பிரதி எடுக்கும் நேரம் முன்- 
நீ மறைந்தே போய் விட்டால் ..
உனக்காக என்னிடம் மீதமிருப்பது...
கசிந்துருகும் என் பழைய பேனா மட்டுமே...

1 comment:

ஜீவா said...

எழுதிய கடிதங்கள் உன்வசம் வீழ
எழுதா கடிதங்கள் என்னுள் புதையலாய்...
மறைந்தே போகுமோ..............?