Thursday, March 3, 2011

தமிழன்னை

காதல் கவிதை கேட்டுவிட்டால் கம்பன் வழி தொடுத்தாய் - இன
மோதல் கவிதை கேட்டுவிட்டால் பெரும்பாணாற்று படை கொடுத்தாய் இலங்கை செல் என்றாய்
போர் கவிதை கேட்டுவிட்டால் வீரம் சொன்னாய் - அரும்
பேர் கவிதை குழந்தை கையில் புறநானூறு வாள்கொடுத்தாய்

செம்மொழி கவிதையாய் குழந்தையாய் நெஞ்சின் தழும்பாய்
இம்மொழியால் புலம்புகின்றாள் என் தமிழன்னை
.

No comments: