Wednesday, March 9, 2011

இந்திய திரு நாட்டில் …
தோண்டினால் தங்கம் கிடைக்கும் …
வெட்டினால் வெள்ளி கிடைக்கும் …
ஆனால் …

படித்தால் மட்டும்
வேலை கிடைக்காது !!

ஆசைகள் அதிகம்
கனவுகள் அதிகம் ஆனால்
வயிற்றுக்கு தேடியே
எங்கள் வாழ்க்கை முடிகிறது..  

முதலாளித்துவம் ஓங்கி நிற்க
தொழிலாளி வேசம்
எங்கள் வாழ்க்கை முழுவதும்....

யாருக்காகவோ உழைக்கிறோம்
யாரென்றுகூட தெரியவில்லை
எங்கள் உழைப்பு மட்டும்
மாத மாதம் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பிய படி...

 

உழைத்து உழைத்து
கைரேகையோடு எங்கள்
ஆயுள்ரேகையும் அழிந்துகொண்டிருகிறது....

பிறருக்கு
உழைப்பு எந்திரமாய்
எங்கள் வாழ்க்கை 

முதலாளிதுவம் முடிவில்
பொதுவுடைமை சித்தாந்தம்
ஏட்டோடு இல்லாமல்
நாடாளும் வரை
எங்களின் வாழ்க்கை
கேள்விக்குறியாய்
வளைந்த எங்கள் முதுகெலும்பை போல்.... 

இதில் கண்டுபிடிப்புகளுக்கு எங்கே இருக்கிறது..

நேரம்...?

என்றோ படித்தோம்...

மனதில் உருதி கொள்
முன்னேற பாதை தேடு
சந்தர்ப்பம் தானாக வராது
அதை நீ உருவாக்கு
சோதனைகளை சாதனையாக்கு... என்று 

 

இன்னும் அதை நம்பியே நகர்த்துகிறோம் நாட்களை...


No comments: