Thursday, March 17, 2011

கண்ணின் மணி போல எனை
கருவறையில் காத்தவளே
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா?
பெண்ணென்ற கலக்கமா,
பெற்றவளே உன்நெஞ்சில்!
கள்ளமில்லா என் தாயே -உன்
உள்ளம் நினைப்பதென்ன...
நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா...
கள்ளிப் பால் வார்த்து
கல்லறை படைக்கவா...
வேண்டாம் தாயே
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லையென்றால்
அரசுத் தொட்டிலில்
போட்டுவிடு..!

No comments: