Friday, March 18, 2011

வெட்கம் விலகாமல்!!!....

மாலை மங்கி
இருள் சூழத் தொடங்கியிருந்தது!!
.
சாலையோர மலர்களை
ரசித்த வண்ணம்
பேச்சைத் தொடர்ந்தாள்!
எதையெதையோ பற்றி
தொடர்ச்சியே இன்றி!

மழைக்கு அதீத காதல்
நிலமடந்தை மீதா?
எங்கள் மீதா?
.
பொழியத் தொடங்கினான்
மூச்சு விடவும் தாமதிக்காமல்...

என்னோடு அவளும் துழாவினாள்
முழுதாய் நனைந்தும்
ஒதுங்க இடமொன்று
.
தஞ்சம் புகுந்தோம்
ஓர் மரத்தின் கீழ்!

அவள் மூச்சுக்காற்று
ஊடலாய்
என் காது மடலோடு!
.
ஆயிரம் ஆயிரம்
மின்னல் கீற்றுகள்,
என் மனதோடு!!

சற்று தைரியமாய்
சேர்த்து அணைத்தேன்
உயிரோடு மெய்யையும்
இதழோடு இதழையும்!!
.
சட்டென்று உணர்ந்தவளாய்
என்னை விலக்கி விட்டோடினாள்.
சிறிதளவும்
வெட்கம் விலகாமல்!!!

No comments: