Saturday, March 12, 2011

யார் நீரில் அதிக வட்டங்கள்...
ஏற்படுத்துவதென்ற நமக்கான போட்டி!...
குளத்துப் படிக்கட்டுகளில்
 தாவியிறங்கிக் கொண்டிருந்தது
கூழாங்கற்களுக்கிடையில்
கவிதை வரிகளைத் தேடியெடுத்து
விட்டெறிந்ததெல்லாம்
என்னுடைய வளையங்கள்…

நீ கண்ணசைத்த கண நேரத்தில்
யட்சனைப் போல மழையொன்று- வந்து
ஆயிரமாயிரம் வளையங்கள்
போட்டுச் சென்றது…
உன் விழிவழிப்பார்வையினால்
திணைகளும் துறைகளும்
திசை மாறிப் போகுமென்ற
பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை
நீரில் வளரும் வளையங்களினூடே
அந்தப் பாசி படர்ந்த
படிக்கட்டுகளும் படித்துக் கொண்டன…என்னோடு கூட...

No comments: