Thursday, March 3, 2011

உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்ததற்கா?

எதற்கு உம்மென இருக்கிறாய் 

மன்னித்துவிடு அக்கா

ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?

இப்படியாக இடைவெளியில் தொலைந்து போகிறது...

எனக்கும் அக்கவுக்குமான பால்யம்

No comments: