Monday, March 14, 2011

திரும்ப கிடைக்குமா?


திரும்ப கிடைக்குமா?

யாரையும் அறியா கோவைக்கு உனக்காக நானும்
யாரையும் அறியா சென்னைக்கு எனக்காக நீயும் 
வந்திறங்கிய நாட்கள்....
பௌர்ணமி இரவில், கடற்கரை மணலில் 
கால் நனைத்த பொழுதுகள்...

திக்கு தெரியாமல், வழிகளும் அறியாமல்
ஒன்றாய் பைக்கில் சுற்றிய சாலைகள்...

மழைகாலம் என தெரிந்தும், கடற்கரை சென்று
ஒதுங்க இடம் இல்லாமல் நனைந்த மழை....

நான் அழைத்து போகும் திரைப்படம் எல்லாம்
அறுவையான படம் என்று கூறி உனக்கு வரும் கோபங்கள்...

நீ கோபப்படுவாய் என தெரிந்தும் உன் கோபத்தை ரசிக்கவே
நான் புக் செய்யும் அறுவை படங்கள்...

உனக்காக நானும் எனக்காக நீயும் புத்தாடை 
எடுபதற்காகவே வரும் பண்டிகைகள்...

அடுத்தவர் தூக்கம் கெடும் என்பதிற்காக
SMS - ல்லேயே நீளும் இரவுகள்...

நீ வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாய் என தெரிந்தும்
எந்த உடையில் நீ வருவாய் என காத்திருக்கும் நொடிகள்...

உடன் இருக்க வேண்டும் என்பதிற்காக 
பாண்டிச்சேரிகும், திண்டிவனத்திற்கும் சென்று
பேருந்திலேயே பொழுதை கழிக்கும் பயணங்கள்...

மனைவியாய் மாறிய காதலியே!
என் அலுவலகத்தின் வேலை பளுவிற்கும்,
உன் வீடு வேலையின் சுமைகளுக்கும்,
நம் குழந்தையின் பராமரிப்பிற்கும்,

இடையில், திரும்ப கிடைக்குமா?

No comments: