Wednesday, March 2, 2011

இராதை பெண்ணானவள்...

சின்னக் கண்ணனின்...
செல்லகுரும்புகளில்
நிதம் தொலைந்து போவது
என் பெண்மையின் நாணங்கள்...!

அவன்..அழகிய கன்னங்களில்
குழிகளில்   தினம் மயங்கி..
விழும் செம்மறியாட்டு 
குட்டி போல் நிதம் தொடருகிறேன்
அவன் நிழலை...

என்றோ ஒரு நாள் மலரப்போகும் 
மகிழம்பூவுக்காய் ..
இன்றே தெளித்து வைத்திருக்கிறேன்..
என் வாசல் கோலத்தை  
கண்ணன் வருவான் என ..

என்னோடு சேர்ந்து..
தனிமையில் சுழலும் 
முகில் பெண்ணானவளின்..
கணங்களின் காதல் அறியாத கண்ணா..
நீ வா வா..  

   -இராதை பெண்ணானவள்...


No comments: