Friday, March 4, 2011

வணக்கதிற்ற்குரிய தமிழையா ...!

நாட்கள் பல கடந்து போயிருந்தது...
அவ்வளவு காலம் அவர் முன்னே ..!
அமர்ந்திருந்த என் கால்கள்..
இப்போது ஏனோ?
அமர மறுக்கிறது...

நினைவுகள் பின்னோக்கி செல்ல..
கண்முன்னே கம்பீரமாய்..
பிரம்புடன் நிற்கும்.. தங்கராசு தமிழையா..!
வெண்ணிறத்தின்..வெளிப்பாடாய்..
வெள்ளை வேட்டிசட்டையுடன் 


பள்ளிகாலத்தில் எனக்கு
பாடம் கற்பித்த என் தமிழ் ஆசிரியர்..

இன்று ..
நன் பணி புரியும்
வங்கியில் ...
காசாளர் முன்னால்
வரிசையில் நிற்கின்றார்..!


பலநாள் அவர் கேள்விகளுக்கு 
பதில் தெரியாமல் 
பேசாமல் நின்றிருக்கிறேன்...


இன்று ....
அவரை பார்த்த பூரிப்பில்...
பேசவராது நின்றிருந்தேன்...

எனக்குள் இருந்த என்னையே 
எனக்கே அடையாளம் காட்டிய 
தமிழையா...
எத்துணையோ ஆசிரியர்களை கடந்து வந்தும்..!


எத்துனையோ பேருக்கு 
(என்போன்றோருக்கு) 
என்றும் மனதில் நிற்கிறார்கள் 
வணக்கதிற்ற்குரிய தமிழையா ...!

No comments: