Monday, March 14, 2011


உன் பிறந்த நாளில்
நான் தந்த பூங்கொத்து 

நீ ஜெயிக்க வேண்டுமென்றே ஊருக்கு
நான் வைத்த கோலப்போட்டி

திருவிழாவில் உன் அம்மாவிற்கு தெரியாமல்
நான் வாங்கித்தந்த வளையல்கள்

நீ கவிதை போட்டியில் பரிசுபெற
நான் எழுதி தந்த கவிதைகள்

பலமுறை அழைத்தும் நீ வராததால்
நான் பார்க்காமலே போன திரைப்படங்கள்

உன்னை எடுக்க சொல்லி
கோவில் நந்திமேல் நான் வைத்த பூச்சரங்கள்

எனக்கு தருவதாய் சொல்லி
பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு நீ தந்த முத்தங்கள்


அடி காதலியே!
என்னைத்தான் மறந்துவிட்டாய்
இவைகளையாவது நினைவில் இருக்கிறதா!!

No comments: