Monday, March 14, 2011

மரபுகளை முறித்து

எனக்குத் தெரியும் நீ யாரென்று
ஏனெனில் நீயும் நானும் ஒன்று

உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்
என்னால் வரையறுக்கமுடியும்
ஏனெனில் உனக்குள் நான்

நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை
நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம்

நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி
நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி
ஆனாலும்

இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல்
எலிக்கும் பூனைக்கும் உறவு
மரபுகளையும் முறித்துக்கொண்டு...

No comments: