Monday, March 14, 2011

பக்தன்...

காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள் 
அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை 
தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை

கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள்
செய்ய மறப்பதும் இல்லை 
கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை 

காதல் கொண்ட காரணத்தால் 
அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள்
போடா தவறியதும் இல்லை 

பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள் 
பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள்
அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள் 

இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும் 
புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல் 
காத்திருக்கிறான் பக்தன் அவன்.

No comments: