Wednesday, March 2, 2011

அது ஒரு காலம் 

நெஞ்சத்தில்
காதல் இல்லை .....

.கைகளில்
கவிதைகூட இல்லை ..

மனசில்
பாரமும் இல்லை ........

வீட்டு சண்டைக்காக மட்டுமே
கண்கள் கண்ணீர் வடிக்கும்
வீட்டை விட்டு வெளியே
வந்தால் உதடுகள் புன்னகைக்கும் ....... 

எல்லாத்தையும் மாற்றி விட்டாய்
உந்தன் ஒற்றை வார்த்தையில்
நீ தான் என் வாழ்க்கை என்று

நம்பியே தொடர்ந்தேன் உன் அருகில்           காதலன்   ஆவேன் என்னும் நம்பிக்கையில் .......

என் விதி எங்கே விட்டது என்னை
உன்னருகில் காதலனாய் மட்டுமில்லை
உன் அருகாமையே இன்று வரை எனக்கு
தெரியாது ...... 

இன்று கவிதையும் கண்ணீரும்
உந்தன் நினைவுகளும் உந்தன்

பெயரும் என்றே கழிகிறது
வாழ்க்கை பயணம் புன்னகை
கூட போலியாக ......

அதிலும் ஒரு வேடிக்கை...!
உன்னை நெருங்க முடியாது
என்று தெரிந்தும் மரணத்தின்
இறுதி நொடியில் உந்தன் மடி
வேண்டும் என்று கெஞ்சும் என்  

அறியாமை கொண்ட காதல் நெஞ்சம்...

No comments: