Wednesday, March 23, 2011

ஒருவேளை என்னவள்
இவையெல்லாம் காண நேர்ந்தால்
இயற்கைக்கும் எனக்கும் இடையில்
நீ கவிதை சொல் என்றிருந்தால்
என் நிலைமை என்னவாகி இருக்கும் ...
கணுக்கள் நதிசுமந்த நங்கை உனக்கும்
கடைகொண்டாலும் படை வெல்லும்
சேரனுக்கும் தொடர்பிருக்குமா
என்றேவா? சொல்லியிருப்பேன் ..

உன்னை நதியாக்கி பார்ப்பதால்தானோ!
சலசலத்து என்னில் காதல் செய்தும்
கடலோடு சங்கமிதிருந்தாய் ...

உன்னை முகிலாக்கி பார்த்தால் தானோ !
இரவில் வந்து நிலவோடு காதல் செய்தும்
மழையாகி மண்ணில் வீழ்ந்தாய்...

எத்துனை தான் சொல் நான் காதலில்
நனைந்த பின்னே கவிதையில்
கை களுவிக்கொல்கிறேன்

பேதை நீமட்டும் இல்லையென்றால்
காட்டாறு போலே நான் கரை
இல்லாமலல்லவே போயிருப்பேன்..

உன்னோடான பொழுதுகளில் இயற்கை
எனக்கு விருந்தாய்
நீ விலகி நிற்கும் பொழுதுகளில்
அதுவே எனக்கு மருந்தாய்...

----கார்த்திக் ராஜா

No comments: