Monday, March 14, 2011



உன் குறும்புகளால்
என்னை கோபப்படுத்துகிறாய் ...

என் கோபங்களை
நீ குறும்பாக பார்க்கிறாய்...

உன் முத்தங்களில்...
என்னை மகிழ்விக்கிறாய்...

என் மகிழ்ச்சியில்
நீ முத்தம் பெறுகின்றாய் ....

உன் அழுகையால்
என்னை சோகம் கொள்ளசெய்கிறாய்...

நான் சோகமானால்
உன் சிரிப்பால் அதை கரைக்கிறாய்...




விரலின் ஸ்பரிசம்,
எச்சில் முத்தம்,
சிறு நடை,
கொஞ்சம் அடம்,
நிறைய குறும்பு,
இவைகளை தினமும் எனக்கு தரும் நீ

தேவதை தந்த வரமா?
இல்லை வரமாய் வந்த தேவதையா?

இன்பத்தையும் சோகத்தையும் சேர்த்து தரும்
நீ என்றுமே எனக்கு ஒரு
அழகான ராட்சசி! அம்மா ....

No comments: