Thursday, March 3, 2011

இரவென்று பகலென்று
தெரியாததா
இதயத்தை இதமாக்க
முடியாததா
உலகத்தை விட என்றும்
உயர்வானதா
உண்மைக்கு உயிர் போன்ற
உறவானதா
பெண்மைக்குள் பயிராகும்
கருவானதா
ஆண்மைக்குள் அழகான
திருவானதா
அன்புக்குள் மெதுவாக
கரையாததா
ஆண்டவனும் அடிபணியும்
நிலை மாறுதா
கலை வளர்த்து களம் படைக்க
உருவானதா
நிலையாக என்றென்றும்
அலை மொதுதா
அழியாத வாழ்வாகி
வடிவானதா
அது தானே காதலின்
பெயரானதா...



பகிர்வு தோழர் குமரன் முத்து
 

No comments: