Tuesday, March 29, 2011

என்னை திட்டி தீர்க்கவும்...அன்பை கொட்டி தீர்க்கவும்...

துளிர்கின்ற பூ மீது படரும் பனி போர்வையில்
ஒரு கடிதத்தை எழுதி நின்றிருந்தேன்
என் விளிமொழியாளின் வதனம் ஈர்க்க..

நான் காணும் நேரமெல்லாம் நீர் குளத்தே
நிற்கும் நாரைபோல் நிலம் காணும் நங்கையை
இவள்...

கண்ணோரம் சிறு மையிட்டே
என்னை வசியம் செய்யும்
பேசா மடந்தையாய் இவள்... 

கடிதங்களை தினம் சுமந்தே...
அஞ்சலனாய் மாறிப்போன நான்
எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தே..
வயதாகிப்போன ...ஏதோ ஒரு மரக்குருவி...

இத்தனை நாளுக்குள் ஒரு முறை
அவள் என்னை நேர் பார்வையால்
கண்டிருந்தாலேயானால்..
நான் என் காதலை தவறியும் சொல்லியிருப்பேன்...

அவள் என்னையும்  காணமல் வேறெங்கும்
காணாமல் நிலம் கண்டு நின்றமையால்
புரிந்து கொண்ட அவள் காதலை...
பருகிக்கொண்டே...தினம் இளைப்பாறி நின்றேன் ...

பனிக்காலமும் வந்து..
பின்னே வேனிலும் வந்திருந்த போதும்..
என் காதல் மட்டும் சொல்லவே இல்லை...

உண்மையுமாய் ...இன்றுவரை
அவள் குழந்தைக்கு கூட தெரிந்திருக்காது ..
அவன் பெயர் என்னுடையது என்று...
சொல்லாத காதலில் மிச்சமாய் ...

ஒருவேளை சொல்லாமல் போனதனாலோ..!
என்னை திட்டி தீர்க்கவும்...அன்பை கொட்டி தீர்க்கவும்...
என் பெயரையே.அவள் பிள்ளைக்கும் சூட்டினாலென்று...  

No comments: