Friday, March 11, 2011

எப்படி சொல்ல என் காதலை

யாரும் சொல்லாத முறையில்

என்னவளுக்கு புரிகின்ற வகையில்

கவிதையாய் சொல்லாமல்

கண்களால் சொல்லாமல்

கடிதம் மூலம் சொல்லாமல்

தூது ஏதும் அனுப்பாமல்

தனியே அழைத்து சொல்லாமல்

குறுஞ்செய்தியாய் அனுப்பாமல்

நிச்சயம் சொல்வேன்...

 

என்றாவது ஒரு மழை நாளில்.... 

1 comment:

ஜீவா said...

சட்டென கை பிடித்து முத்தத்தால் சொல்லலாமோ?